Krishna Janmashtami , கிருஷ்ண ஜெயந்தி

 

 

Krishna Janmashtami, கிருஷ்ண ஜெயந்தி Gokulashtami,
 

 

 Krishna Janmashtami, also called Gokulashtami, is a Hindu festival that occurs annually. It is a celebration of the birth of Lord Krishna.

According to the Panchanga or Hindu calendar, it falls on the eighth day (Ashtami) in the month of Shravana. In the western Gregorian calendar, this is usually in the month of August or September. 

In 2023,  Gokulashtami falls on 6th & 7th of September. It is observed as a holiday in many private and public organizations.

 

All About Krishna Janmashtami ,Gokulashtami

Krishna Janmashtami (Sanskrit: कृष्णजन्माष्टमी, romanized: Kṛṣṇajanmāṣṭamī), also known simply as Krishnashtami, Janmashtami, or Gokulashtami, is an annual Hindu festival that celebrates the birth of Krishna, the eighth avatar of Vishnu. In certain Hindu texts, such as the Gita Govinda, Krishna has been identified as supreme God and the source of all avatars.[5] Krishna's birth is celebrated and observed on the eighth day (Ashtami) of the dark fortnight (Krishna Paksha) in Shravana Masa (according to the amanta tradition) or Bhadrapada Masa (according to the purnimanta tradition). This overlaps with August or September of the Gregorian calendar.[5]

It is an important festival, particularly in the Vaishnavism tradition of Hinduism.The celebratory customs associated with Janmashtami include a celebration festival, reading and recitation of religious texts, dance and enactments of the life of Krishna according to the Bhagavata Purana, devotional singing till midnight (the time of Krishna's birth), and fasting (upavasa), amongst other things.  It is widely celebrated across India and abroad.



 
கிருட்டிண சென்மாட்டமி
கிருட்டிணனின் படம்
பிற பெயர்(கள்)    சென்மாட்டமி. சிரீ கிருட்டிண செயந்தி
கடைபிடிப்போர்    இந்து
வகை    சமயம்
அனுசரிப்புகள்    பூசை, வேண்டுதல் மற்றும் விரதம்
நாள்    சிரவணம், கிருட்டிண பட்சம், அட்டமி

சிரீ கிருட்டிண செயந்தி (சமசுகிருதத்தில் கிருட்டிண சென்மாட்டமி (कृष्ण जन्माष्टमी)), ஆண்டுதோறும் கிருட்டிணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகத்து அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருட்டிண செயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாட்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.
கிருட்டிண செயந்தி விழா சமயத்தில் விற்கப்படும் கிருட்டிணர் சிலைகள்
மும்பையில் கோவிந்தாக்கள் தயிர்க்கலசத்தை எட்ட மனித நாற்கூம்பு அமைத்தல்

இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு பொது விடுமுறை அளித்துள்ளது.
வட இந்தியாவில் கிருட்டிண செயந்தி

ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு) அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும், வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.[1]
தென்னிந்தியாவில் கிருட்டிண செயந்தி
தென்னிந்திய வீடு ஒன்றில் சிரீ செயந்தி கொண்டாடப் படுகிறது.

    தென்னிந்தியாவில் சிரீசெயந்தி, சென்மாட்டமி, கோகுலாட்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் மாலை நேரத்தில் சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது.
    அனைத்து சமுதாய பண்டிகையாக நடைபெறுகிறது.

கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிருட்டிண செயந்தி. கிருட்டிண செயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.

கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால், பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன. 

 

விரதம் இருத்தல்:
எப்போதும் விரதம் இருப்பதைப் போல கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருந்தால் பல விஷேச பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள் முன்னோர்கள்...


இந்த நாளில் காலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபட வேண்டும்.
இந்த தினத்தில் மூன்றே முக்கால் நாளிகையாவது (ஒரு நாளிகை 24 நிமிடங்கள்) விரதம் இருப்பது நல்லது. இதனால் நாம் மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் தீரும். மழலைச் செல்வம், குறையாத செல்வங்கள் போன்ற வரங்கள் தருவார்.

விரதத்தின் போது பழங்கள், பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் அரிசியால் செய்ததைத் தவிர வேறு ஏதேனும் உணவை உண்ணலாம்.
 

எப்படி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது?
கிருஷ்ணர் பிறந்த போது மூவர் மட்டும் விழித்திருந்ததாகக் கூறப்படுகிறது. வசுதேவர்- தேவகி மற்றும் சந்திர பகவான். இதனால் கிருஷ்ண ஜெயந்தி பூஜையான சூரியன் மறைந்த பின்னர், மாலை நேரத்தில் செய்வது சிறந்தது.


பூஜிப்பதற்காக கிருஷ்ணனின் புகைப்படம் அல்லது விக்கிரகம், சிலை ஏதேனும் ஒன்றை பூஜை செய்வதற்கு முன்னர் நன்கு சுத்தம் செய்து சந்தனம், குங்கும திலகம் இடவும். பூஜிக்கு இடத்தில் ஒரு பலகை வைத்து அதன் மீது வைக்கவும்.

முடிந்தால் நீங்களே களிமண்ணால் கிருஷ்ணர் சிலையை செய்து வழிபடுவது சிறந்தது.

பூஜை தொடங்கு வதற்கு முன்னர் கிருஷ்ணருக்கு முன் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மீது சிறிது அரிசியை பரப்பி, அதன் மீது ஒரு வெண்கல குடம் நிறைய நீருடன் வைத்து, அதன் மீது மாவிலை வைத்து, தேங்காயை கலசம் போல வைக்கவும்.


கலசத்தின் வலது புறம் மஞ்சளால் பிள்ளையாரைப் பிடித்து வைக்கவும். பின்னர் அந்த கலசத்திற்கும் பிள்ளையாருக்கும் திலகம் இடவும், பூக்கள், மாலைகள் இடவும்.

 

பலகாரம்:
கிருஷ்ணருக்கு பிடித்த சீடை, முருக்கு அல்லது உங்களால் செய்ய முடிந்த இனிப்பு வகைகளும், நாவல் பழங்கள், விளாம்பழம் உள்ளிட்டவற்றைவைத்து பூஜையை தொடங்கலாம். பூஜை தொடங்குவதற்கு முன், கிருஷ்ணருக்கு பிடித்த நெய்வேத்தியங்கள் வைத்து வணங்கவும். குறைந்தது சிறிது வெண்ணெய்யும், அவல் வைத்தல் நல்லது.

கிருஷ்ண பாதம்:
உங்கள் வீட்டில் குட்டி குழந்தைகள் இருந்தால், அவர்கள் பாதங்களில் அரிசி மாவால் கிருஷ்ண பாத சுவடு வைக்கலாம், அல்லது நம், கைகளால் கிருஷ்ண பாதங்களை வெளியிலிருந்து, வீட்டின் உள் நோக்கி வருவது போல சுவடு பதிக்கவும்.

 
பூஜை ;
பூஜை தொடங்குவதற்கு முன் நெய் விளக்கேற்றி அதன் முன் பூஜை பொருட்களைவைத்து பிள்ளையாரையும், கிருஷ்ணரையும் வணங்கி பூஜையை தொடங்கலாம். தடை ஏதும் இல்லாமல் பூஜை நிறைவேறவும்.

கிருஷ்ணரை மனதில் நினைத்துக் கொண்டு கிருஷ்ண துதிகள், மந்திரங்களை சொல்வது நல்லது.
கலசத்தையும், கிருஷ்ணரையும் வணங்கி தீப, தூப ஆராதனை செய்ய வேண்டும். கிருஷ்ண துதி செய்யும் போது மலர்களை கிருஷ்ணர் மீது தூவவும்.

குறைந்தது கிருஷ்ணர், ராதைக்கான காயத்திரி மந்திரமாவது கூறுங்கள்..

கிருஷ்ணர் காயத்ரி மந்திரம் : Krishna Gayatri Mantra 

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,
வாசுதேவாய தீமஹி,
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.

ராதாவிற்கான காயத்ரி மந்திரம் :ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,
கிருஷ்ணப்ரியாயே தீமஹி,
தந்நோ ராதா ப்ரசோதயாத்.


இதை உச்சரித்து கிருஷ்ணரை வழிபாடு செய்யலாம்.